Skip to main content

பரபரப்பான இறுதி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி

Published on 19/05/2023 | Edited on 20/05/2023

 

Rajasthan wins in thrilling final over

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 66 ஆவது லீக் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 187 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 49 ரன்களையும் ஜிதேஷ் சர்மா 44 ரன்களையும் ஷாருக்கான் 41 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களை வீழ்த்தினார். போல்ட், ஜாம்பா தலா 1 விக்கெட்டை எடுத்தனர். பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 51 ரன்களையும் ஹெட்மயர் 46 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், சாம் கர்ரன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டார்.

 

இன்றைய போட்டியில் பவர் ப்ளேவில் 3 விக்கெட்களை பஞ்சாப் அணி இழந்து இருந்தது. இதன் மூலம் நடப்பு சீசனில் பவர் ப்ளேவில் அதிக விக்கெட்களை இழந்த அணி என்ற மோசமான சாதனையை கேகேஆருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அதேபோல் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்களை இழந்த அணி என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது. அந்த அணி 7 முதல் 15 ஓவர்களில் மட்டும் 40 விக்கெட்களை இழந்துள்ளது.

 

 

Next Story

நிராகரிப்பின் வலி;பஞ்சாப்பை நிமிரச் செய்த சஷாங்க் சிங்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

ஐபிஎல்2024 இன் 42ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நவம்பர் மாத மழை என்பது எப்படி உறுதியோ அதுபோல நரைனின் அதிரடி உறுதி என சிறப்பாக ஆரம்பித்தார் சுனில் நரைன். அவருடன் இணைந்து சால்ட்டும் சகட்டுமேனிக்கு சிக்சர்களை பறக்கவிட கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 137 ரன்கள் குவித்தது.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

சால்ட், பேர்ஸ்டோ என இருவரும் அரைசதம் கடந்தனர். நரைன் 71, சால்ட் 75 என சிறிய இடைவெளியில் இருவரும் ஆட்டமிழக்க அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 39 (23), ரசல் 24(12), ஸ்ரேயாஸ் ஐயர் 28(10) என அவர்கள் பங்குக்கு சில சிக்சர்களையும், பவுண்டரிகளையும் பறக்க விட கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது. அர்ஸ்தீப் 2, சாம் 1, ஹர்ஷல் 1, ராஹுல் 1 முறையே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 262 ரன்கள் எனும் வரலாற்று இலக்கை விரட்டியது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் செய்ய தடுமாற பிரப்சிம்ரன் சிங் சிக்சர்களை பறக்க விட்டார். பவுண்டரிகளும் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர்.பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பேர்ஸ்டோ தன் பங்குக்கு அதிரடி காட்டி அரை சதம் கடந்தார். பின்னர் பேர்ஸ்டோவுடன் இணைந்த ரூசோ சிறிது அதிரடி காட்டி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் சாம் கரன் இறங்காமல், இந்த சூழலை சமாளிக்க சஷாங்தான் சிறந்தவர் என முடிவெடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு அவரைக் களமிறக்கினார். சஷாங்க் அவரை ஏமாற்றவில்லை. இந்த ஐபிஎல்-இல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஷாங்க் சிங், ஈடன் கார்டன் மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் தன் அட்டகாசமான பேட்டிங்கால் பந்துகளை சிக்சர்களாக மாற்றி சிதறடித்தார். விக்கெட் விழ சிறு வாய்ப்பு கூட தராமல் அதிரடியாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும் அடங்கும்.

The pain of rejection; Shashank Singh who gives victory for Punjab!

அனுபவ வீரருக்கான அழகுடன் ஆடிய பேர்ஸ்டோ ஐபிஎல்-இல் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 262 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரு அணியால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதன் மூலம் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் ரேசில் நாங்களும் உள்ளோம் என்று மற்ற அணிகளுக்கு தெரிவித்துள்ளது. சதமடித்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Next Story

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நம்பிக்கையுடன் போராட வேண்டும் - ராஜஸ்தான் வீரர் புகழாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Dhoni, like Kohli, has to fight till the end with confidence - praises the Rajasthan player

தோனி, கோலியைப் போல் இறுதிவரை நின்று  நம்பிக்கையுடன் போராட வேண்டும் என்று ராஜஸ்தான் வீரர் பட்லர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் 2024இன் 31ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் நரைன், ரகுவன்ஷி இணை கொல்கத்தா ரசிகர்களை குதூகலிக்க வைத்தது. கடந்த சில ஆட்டங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் இந்த ஆட்டத்தில் அதிரடியின் உச்சம் தொட்டார்.

ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் நிமிர விடாமல் செய்தார். 56 பந்துகளில் 6 சிக்சர்கள் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார். ஐபிஎல்-இல் இது அவருடைய முதலாவது சதமாகும். ரகுவன்ஷி 30, ஷ்ரேயாஸ் 11, ரசல் 13, ரிங்கு 20 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது.

224 ரன்கள் என்பது இமாலய இலக்காக இருந்தாலும், பலமான பேட்டிங் உள்ளதால் கொல்கத்தாவில் இதை சேஸ் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக ஜெய்ஸ்வால் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சாம்சனும் 12 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி தாடுமாறியது. இருப்பினும் பட்லருடன் இணைந்த பராக் ஓரளவு அதிரடி காட்டி 14 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜுரேல் 2, அஸ்வின் 8 என சீக்கிரமே நடையைக் கட்டினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையரும் டக் அவுட் ஆக ராஜஸ்தான் திணறியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் அரைசதம் கடந்து நங்கூரம் போட்டு நின்றார் பட்லர். ரோமன் பவலின் அதிரடியான 26 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து தனது சதத்தையும் கடந்தார் பட்லர். 5 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட, அடுத்த 3 பந்துகள் டாட் பாலானது. 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஐபிஎல் 2024இன் முதல் சூப்பர் ஓவர் ஆகுமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், கடைசி பந்தில் படலர் சிங்கிள் எடுக்க ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சிறப்பாக ஆடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது “ நீங்கள் நம்பிக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் திறவுகோல். நான் எனது பேட்டிங்கில் தடுமாறும்போது எனக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதை எதிர்த்து என் எண்ணங்களை மாற்ற முயற்சிப்பேன். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் போது சரியாக நடக்கும். இது மாதிரி ஐபிஎல்லில் எனக்கு நிறைய முறை நடந்துள்ளது. தோனி மற்றும் கோலி, இது போல் பல முறை ஆடியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போல் இறுதி வரை நம்பிக்கையுடன் தொடர்ந்து போராட வேண்டும் என்று முடிவு எடுத்தேன். சங்கக்கராவும் அதைத்தான் சொல்வார். பேட்டிங் செய்ய தடுமாறும்போது நாம் அழுத்தத்திற்கு உள்ளாகி தவறான ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்போம். கொஞ்சம் நிதானமாக் யோசித்து பொறுமையாக ஆடினால் நமக்கான ஒரு ஷாட் கிடைக்கும். அது நம்பிக்கையைக் கொடுக்கும் என்று. ஒரு பெரிய சேசிங்கில் கடைசி பந்தில் ரன் எடுத்து வெற்றி பெறுவது மனதுக்கு நிறைவானது” என்றார்.