Skip to main content

டாஸ் வென்றது சென்னை அணி.. போட்டியை வெல்லுமா? - ஐ.பி.எல். போட்டி #46

Published on 13/05/2018 | Edited on 13/05/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும், ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து ஆட்டத்திற்கு ஏற்ற மைதானம் என்பதால், தாங்களும் பவுலிங்கையே தேர்வு செய்திருப்போம் என சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்திருக்கிறார்.

 

csk

 

என்னதான் மிஸ்டர் கன்சிஸ்டன்ஸி டீம் என அழைக்கப்பட்டாலும், சென்னை அணி அதை மீட்டெடுக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் மிகச்சிறப்பாக ஆடினாலும், பட்லரை அவுட் ஆக்கமுடியாமல் திணறியது. அந்த அணி கடைசியாக ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.

 

அதேசமயம், சென்னை அணியுடன் முதல்முறை மோதி தோல்வியுற்ற ஐதரபாத் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், ப்ளே ஆஃபிற்கு தகுதியும் பெற்றிருக்கிறது. அந்த அணியின் பலமே பவுலிங்தான் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி உடனான போட்டியில் ஒரே விக்கெட் மட்டுமே கொடுத்து, பேட்டிங்கிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தது அந்த அணி. அதேசமயம், பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், பவுலிங்கில் இன்னமும் மீளமுடியாத தூரத்தில் சென்னை அணி இருக்கிறது.

 

srh

 

இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் சென்னை அணி ஐந்துமுறை வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோல், புனே மைதானத்தில் இதுவரை இந்த அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலுமே சென்னை அணியே வென்றிருக்கிறது. மீண்டும் அதே வலுவான ஆட்டத்தை இன்றும் சென்னை வெளிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.