Skip to main content

புஜாராவை ஏலம் எடுத்த கிங்ஸ் அணி!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

PUJARA

 

இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர்.

 

கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், மேக்ஸ்வேல் ரூ.14.25 கோடிக்கும் ஏலம் போன நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புஜாராவை 50 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

 

மார்ட்டின் கப்தில் ஏலம் போகவில்லை. கைல் ஜேமீசன் 15 கோடிக்கு பெங்களூர் அணிக்கு ஏலம் போயுள்ளார். பென் கட்டிங், லபூஷனே ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. மொய்சஸ் ஹென்ரிக்ஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். வருண் ஆரோன் ஏலம் போகவில்லை. டாம் கரண் 5.25 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார். மிட்செல் மெக்லெனகன் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் இருவரையும் முதல் கட்ட ஏலத்தில் யாரும் வாங்கவில்லை.