Skip to main content

மும்பை அணிக்கு ஆடிய பந்துவீச்சாளரை ஒப்பந்தம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

jason behrendorff

 

உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், இன்று இரவு (9ஆம் தேதி) தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து வீரர்கள், தங்கள் அணியோடு இணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

 

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்றாக இன்னொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்பை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019ஆம் ஆண்டில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்பதால், சென்னை அணியின் முதலிரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.