Skip to main content

"சாம்பியன்கள் விரைவாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.." - தோனி ஓய்வு குறித்து கங்குலி பேச்சு!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்குலி தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 
 

jkl



தோனியின் எதிர்காலம் குறித்து கங்குலி கூறுகையில், " தோனி மனதில் என்ன உள்ளது என்பது தெரியவில்லை. தோனி போன்ற வீரர் கிடைத்தது இந்தியாவுக்கு பெருமையான விஷயம். நான் இருக்கும்வரை ஒவ்வொருவரும் மதிக்கப்படுவார்கள். தோனியின் சாதனைகளால் நிச்சயம் நாட்டிற்கு பெருமை தான். நான் அவரின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை. விரைவில் இதுகுறித்து அவரிடம் பேசுவேன். நான் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட போது, மீண்டும் வரமாட்டேன் என்ற கருத்து நிலவியது. ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து 4 ஆண்டுகள் நான் விளையாடினேன். சாம்பியன்கள் அவ்வளவு விரைவாக விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார்கள் " என்றார்.