Skip to main content

அஷ்வின் படத்தைப் போட்டு புஜாராவைப் பாராட்டிய தென்ஆப்பிரிக்க ட்விட்டர் பக்கம்!

Published on 25/01/2018 | Edited on 25/01/2018
அஷ்வின் படத்தைப் போட்டு புஜாராவைப் பாராட்டிய தென்ஆப்பிரிக்க ட்விட்டர் பக்கம்!

ஜோனஸ்பெர்க்கில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், 187 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. 

இந்தப் போட்டியில் இரண்டாவதாக களமிறங்கிய இந்திய வீரர் சதீஸ்வர் புஜாரா, 54ஆவது பந்தில்தான் தனது முதல் ரன்னை எடுத்தார். கிட்டத்தட்ட 80 நிமிடங்களுக்கு களத்தில் ரன் ஏதும் எடுக்காமலேயே அவர் விளையாடிக் கொண்டிருந்தார். 



விக்கெட்டைக் கொடுக்காமல் ஆடிக்கொண்டிருந்த புஜாரா 173ஆவது பந்தைச் சந்தித்தபோது, தனது அரைசதத்தைக் கடந்தார். இது அவரது 17ஆவது அரைசதமாகும். இதனைப் பாராட்டும் விதமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் ட்விட்டர் பக்கம் ஒரு பதிவை வெளியிட்டது. அதில் சதீஸ்வர் புஜராவிற்கு பதிலாக இந்திய சுழல்பந்து வீச்சாளர் அஷ்வினின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருந்தது. 

இந்த ட்வீட்டில் ரவீந்திர ஜடேஜாவின் பெயரில் இயங்கும் போலிக்கணக்கின் சார்பில், அது அஷ்வினின் புகைப்படம் என பதிலளிக்கப்பட்டிருந்தது.

சார்ந்த செய்திகள்