Skip to main content

“ஜங்க் ஃபுட்களை ஏன் தவிர்க்க வேண்டும்” - சித்த மருத்துவர் ஷர்மிகா விளக்கம்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

   “Why Avoid Junk Foods Totally” - Siddha Doctor Sharmika Explains

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும்; ஜங்க் ஃபுட்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதை பின்வருமாறு விளக்கமாக காணலாம்.

 

நான் எப்போதுமே என்ன சாப்பிட வேண்டும் என்று தான் சொல்லுவேன். ஜங்க் உணவுகளை எப்போதுமே சாப்பிட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். மாதத்திற்கு ஒரு நாள் சாப்பிடலாம். மற்ற நாட்களில் உங்கள் உடல் மீது கவனம் செலுத்தலாம்.  உடம்பை பார்த்துக் கொள்ளாத மனிதன், மனிதனே இல்லை. ஏன் என்றால் கடைசி வரைக்கும் நம்ம கூட வருவது நம் உடல் மட்டும் தான். நம்ம உடலுக்கு நாம் ஒரு நல்லது செய்தால், அது நமக்கு ஆயிரம் நல்லது செய்யும். நாம ஒரு கெடுதல் செய்தால், அதுவும் நமக்கு கெடுதல் செய்து விடும். 

 

நல்ல ஜங்க் உணவு என்று சொன்னால் பிரியாணி தான் என்று சொல்ல முடியும். வெளியே சென்று மீன், மட்டன் என்று சாப்பிடும் போதும் சரி. வேறு எந்த உணவு சாப்பிட்டாலும் சரி. எல்லா உணவும் ஒரு வகையில் ஜங்க் ஃபுட் தான். ஏன்னா ரீபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துவார்கள். ரோட்டு கடை உணவில் அளவு ரொம்ப கம்மியா தான் இருக்கும். அதாவது அன்றைக்கு தேவையான உணவை மட்டும் தான் செய்வார்கள். ஆனால், பயன்படுத்தும் எண்ணெய் ரீபைண்ட் ஆயில்.

 

நம் நாட்டைச் சாராத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  பீட்சா, பாஸ்தா எல்லாம் வெளிநாட்டு டிஎன்ஏ அந்த உணவை எடுத்துக் கொள்ளும். நம்ம உடலுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. நம்ம உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.  நம்ம உடல் இது என்ன உணவு என்று தான் கேட்கும். ஒருவேளை வெளியே சென்று சாப்பிடும் போது, நம்ம ஊரு கொத்துகறி, மூளைகறின்னு சாப்பிடலாம். இந்த உணவுகளை வாரத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எப்போதாவது எடுத்துக்கொண்ட ஜங்க் உணவை,  நாம் இப்போது டெய்லி அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறை சாப்பிட ஆரம்பித்து விட்டோம்.  நாம் பாக்குற வேலையும், மன அழுத்தம் நிறைந்ததாக மாறக் காரணமாக இரவு நேரங்களில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம்.

 

நம்ம மொபைல் ஆப் வழியாக உணவை ஆர்டர் செய்து சாப்பிடும்  வரைக்கும் நம்  உடம்பிற்கு ஆரோக்கியமே ஏற்படாது. நாம் முன்பு எல்லாம்  பழங்கள் நம்ம வீட்டில் வைத்து  இருந்தோம். இப்போது அப்படி இல்லை. டெய்லி நான் வெஜ் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் வீட்டிற்கு செல்லும் போது பழங்களை  வாங்கி செல்லலாம். பழங்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது என்பது உடலுக்கு நல்லது

 


 

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.