Skip to main content

தேங்காய்ப்பாலின் மருத்துவ ரகசியம் - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

The Medicinal Secret of Coconut Milk - Explained by Ayurvedic  Dr Suganthan

 

தேங்காய் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை நமக்கு வழங்குகிறார் டாக்டர் சுகந்தன்.

 

தென்னம்பிள்ளை வளர்ப்பது வீட்டில் ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு சமம் என்று சொல்வார்கள். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு விஷயம் தான் தேங்காய்ப்பால். அல்சர் சம்பந்தமான விஷயங்களுக்கு எளிமையான ஒரு உணவுமுறை மருந்து தான் தேங்காய். இன்று குழந்தைகளுக்கு நல்ல கொழுப்புச்சத்து கிடைக்காமல் போகிறது. உணவில் தேங்காய் பயன்படுத்துவது இன்று குறைந்துகொண்டே வருவது தான் அதற்கான காரணம். முடி உதிர்தல் பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. தேங்காய் எண்ணெய் வைப்பதை நாம் நிறுத்தியது தான் இதற்கான காரணம்.

 

தேங்காய்க்குள் பல்வேறு ஆற்றல்கள் இருக்கின்றன. தேங்காய் என்பது எளிதில் கெட்டுப்போகக் கூடிய ஒன்றல்ல. தேங்காய் சாப்பிடுவதால் புற்றுநோயைத் தவிர்க்கக்கூடிய ஆற்றல் நமக்கு கிடைக்கும். கீமோதெரபி, ரேடியோதெரபி கொடுக்கக்கூடிய ஆற்றல்கள் தேங்காயில் இருக்கின்றன. கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் தேங்காய் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். வாய்ப்புண்ணை ஆற்றக்கூடிய சக்தி தேங்காய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். 

 

இதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகிவிடும். தொண்டையில் இருக்கும் சளி எளிதாக வெளியே வரும். ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு தேங்காய் கொடுக்கும்போது அவர்கள் வலுப்பெறுவார்கள். ஒரு காலத்தில் தாய்ப்பாலுக்கு நிகராக தேங்காய்ப்பாலையும் கொடுத்து வந்தார்கள். இப்போது அது குறைந்துவிட்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவு உண்ட பிறகு குடிப்பது நல்லது. பித்தப்பை மற்றும் சிறுநீரக கல் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாம். ஒரு காலத்தில் இளநீர் என்பது குளுக்கோசாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

 

இளநீர் குடித்தவுடன் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இது உடலுக்கு திடமான ஆரோக்கியத்தை அளிக்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் பல்வேறு நோய்களை நம்மால் வென்று காட்ட முடியும். நமக்கு அருகிலே இருக்கும் கேரள மக்கள் தொடர்ந்து தேங்காயைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனுடைய மகத்துவம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. நமக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தையும் வழங்கும் தேங்காயை நாம் தினமும் பயன்படுத்த வேண்டும்.

 


 

Next Story

வறட்டு இருமலுக்கு என்ன தான் தீர்வு? - ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்கம்!

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Dr Suganthan | Cold | Dry Cough |

 

மழைக்காலங்களில் ஏற்படுகிற வறட்டு இருமலுக்கு ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் தீர்வு சொல்கிறார்

 

வறட்டு இருமலுக்கு எவ்வளவோ மருந்து, மாத்திரை சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்பவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ‘மகா சுதர்சன சூரணம்’ பரிந்துரை செய்வோம். இதனை 125 மில்லி கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். 

 

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறவர்கள் பலவகையான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ’ஆடாதொடா மணப்பாகு’ பரிந்துரை செய்வோம். இது சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி சாப்பிட்டு வருவதால் நெஞ்சு சளியை சரி செய்து, நன்றாக மூச்சு விட உதவும். 

 

தீவிரமான காசநோய் ஏற்பட்டு சளி, இருமல் இருப்பவர்கள் ஆடாதொடா மணப்பாகு உடன் இம்பூரல் பொடியினை கலந்து சாப்பிட்டு வர சரி ஆகும். இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும். இதனால் இருமல் நீங்கி ஆரோக்கியமான உடல்நிலைக்கு வரலாம்.

 

இருமலுக்கு அதிமதுரம், வெற்றிலை, மிளகு, ஓமம், துளசி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு தேநீர் வைப்பது போன்று காய்ச்சி அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும். 

 

நல்லெண்ணைய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வைரஸ் தொற்றுகள் தங்காது. சீரகம், ஓமம் கலந்து தண்ணீரை சுட வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வறட்டு இருமலில் இருந்து குணமடையலாம். விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்பு கசாயம் வைத்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு காய்ச்சல் அளவு குறையும்.

 

 

 

 

Next Story

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு பிரச்சனையா?  -  ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் ஹெல்த் டிப்ஸ்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Dr Suganthan | Digestion tips

 

தீபாவளி தின்பண்டங்கள் அதிகம் சாப்பிட்டு வயிறு மந்தமாகவே இருந்தால் பின்வருகிற டிப்ஸை பின்பற்றி சரி செய்து கொள்ளலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன்

 

தீபாவளிக்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளித்திருப்போம். இப்போதைய பருவ கால மாற்றத்தால் இதில் உங்களுக்கு சளி பிடிக்க வாய்ப்பிருக்கிறது. மழை காலம் என்பதால் சுடுதண்ணீர் வைத்து குளிப்பது நல்லது. மேலும் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் ராஸ்னாதி சூரணம் வாங்கி உச்சந்தலையில் வைத்தால் நல்லது. மேலும், கற்பூராதி தைலம் என்று கிடைக்கும். அதை வாங்கி தேய்த்து வருவதாலும் தலைவலி, சளி பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு வயிறு மந்தமாக இருந்தால் ஓமம் சிறிதளவு எடுத்துக்கொண்டு, சுடுதண்ணியில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். வயிறு மந்தத்தால் வாந்தி எடுக்க முயன்றால், இதை குடிக்க வேண்டும். அப்போது இது சரியாகும். 

 

தீபாவளி பலகாரம் சாப்பிட்டு மலச்சிக்கல் ஏற்பட்டால் ஓமம், சீரகம், இந்து உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவு சுடுதண்ணீரில் கலந்து குடித்தால், காலையில் சிக்கல் சரியாகிவிடும். வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைப் பயன்படுத்தி தீபாவளி தீனியால் வரும் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளலாம்.

 

கடையில் தீபாவளி லேகியம் என்றே வைத்திருப்பார்கள். அவையெல்லாம் இது போன்ற வீட்டில் கிடைக்கும் மளிகை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுபவையே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.