Skip to main content

“இதுதான் சிறந்த காலை உணவு முறை” – அறிவுறுத்துகிறார் சித்த மருத்துவர் ஷர்மிகா

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

“This is the best breakfast method” – Siddha doctor Sharmika

 

ஓம் சரவண பவ யூடியூப் சேனலுக்கு சித்த மருத்துவர் ஷர்மிகா நம்முடைய உணவு முறைகள் பற்றியும், எதையெல்லாம் முழுவதுமாக தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் உண்ண வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் காலை உணவு பற்றியும் ஆர்கானிக் காய்கள் பற்றியும் கேட்ட பொழுது அவர் அளித்த விளக்கத்தினை  பின்வருமாறு  காணலாம்.

 

காட்டுவாசியாக  இருக்கும் போது  நிறைய உழைத்தோம். நினைத்த நேரம் தூங்குவோம். அதன் பிறகுதான் வேட்டை எல்லாம் வருது.  பிரேக்ஃபாஸ்ட் என்பது: நைட் தூங்கி காலை ஏழு மணி வரைக்கும் பன்னிரண்டு மணி நேரம் வயிறு காலியாக இருக்கும். காலை எழுந்ததும் பழங்களைச் சாப்பிடலாம். பழைய காலத்தில் எல்லாம் பழங்களைத்தான் சாப்பிட்டார்கள். கல்லைப் போட்டாலும் கரையுர வயசுன்னு சொல்வாங்க. ஆனால், இப்போதெல்லாம் கல்லு போட்டாலும் கரையாது. ஒரு சில பழைய பழக்க வழக்கங்களை தற்போது புழக்கத்தில் கொண்டு வர முடியாது. ஆனால், கொண்டு வந்தால் நல்லது. பிரேக்ஃபாஸ்ட் இப்போ எல்லாம் பாஸ்டாக எடுத்துக் கொள்கிறோம்.

 

சிறந்த காலை உணவு 

காலையில் ராஜா மாதிரி சாப்பிடணும். மதியம் மந்திரி மாதிரி சாப்பிடணும். நைட் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும்னு சொல்வாங்க. இது வந்து அந்தக் காலத்தில் பிச்சைக்காரன் அப்படி சாப்பிட்டு இருப்பாங்க போல. அதற்கு ராஜா மாதிரி தட்டு முழுவதும் வைத்து சாப்பிட வேண்டும் என்று இல்லை. அதிகமான நியூட்ரிஷன் உள்ள உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். என் காலை உணவில் எப்போதும் விதவிதமான இலைகளைப் பயன்படுத்தி தேநீர், பழங்கள், ட்ரை புரூட் ஜூஸ் இருக்கும். மக்காச்சோளம், வேர்க்கடலை, வேகவைத்த வெள்ளை சுண்டல், கருப்பு சுண்டல், பச்சைப் பட்டாணி என்று இதில் ஏதாவது ஒன்று இருக்கும். பழங்கள் சாப்பிடும் போது தான் பசியைத் தூண்டும். பசித்து சாப்பிடுவது நல்லது. 

 

ஆர்கானிக் காய்கள்

ஆர்கானிக் என்பது நம்ம நாட்டுக் காய்கறிகளும் உணவும் தான். அதைக் கண்டுக்காம விட்டது நம்ம தப்பு தான். முதலில் நாம பத்து ரூபாய்க்கு வாங்கிய தக்காளி இப்போது ஆர்கானிக் தாக்களினு சொல்லி இருபது ரூபாய்க்கு வாங்குகிறோம். நாம் அதிகமாக ஆர்கானிக் காய்கறிகளை வாங்கும் போது அதன் விலையும் குறைவாக இருக்கும். ஆர்கானிக் காய்கறிகள் உற்பத்தி கம்மியாத்தான் இருக்கிறது. அதனால்தான் விலை அதிகம். நாம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் உற்பத்தி அதிகமாகி விலை குறையும்.

 

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.