Skip to main content

வணங்கினால் பலன்களை அள்ளித்தரும் ஆவடியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Avadi Angala Parameshwari amman temple

 

ஆவடியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் சிறப்புகள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர் கோவில் அர்ச்சகர்களும் பக்தர்களும்...

 

அம்மனிடம் நீங்கள் மனமுருகி என்ன வேண்டிக்கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேறும். இங்கு இருக்கும் அம்மன் சுயம்புவாக வளர்ந்த அம்மன். வாழ்க்கையில் சிலர் பணம் வேண்டும் என்றும் சிலர் ஆரோக்கியம் வேண்டும் என்றும் நினைப்பார்கள். அம்மனிடம் சரணாகதி அடைந்தால் வேண்டிய அனைத்தும் நமக்குக் கிடைக்கும். எனக்கு என்ன வேண்டுமோ அதை நிறைவேற்றித்தா என்று அம்மனிடம் வேண்டினால் போதும். அம்மன் நிறைவேற்றி வைப்பாள். நம் கோவிலில் கால பைரவர், சொர்ண பைரவர் என்று இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். 

 

குழந்தை பாக்கியம் வேண்டும், திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி இங்கு வரும் பக்தர்கள் பலர். அவர்களுடைய வேண்டுதல்கள் அனைத்தையும் அம்பாள் நிறைவேற்றித் தருவார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை வழிபட்டு வந்து, அதனால் தங்கள் குடும்பச் சிக்கல்கள் தீர்ந்தன என்று பல பக்தர்கள் கூறுகின்றனர். பங்குனி உத்திரம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள விநாயகர் வினைகள் அனைத்தையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவர். சிவன் சன்னதி, பெருமாள் சன்னதியோடு புதிதாக காமாட்சி சன்னதியும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதியின் அம்சம் தான் காமாட்சி.

 

திருப்பதி குடை இங்கு வந்துவிட்டுப் போகும். சொர்க்கவாசல் திறப்பு விசேஷமாக நடக்கும். சனி பகவான் நமக்கு நன்மையையே அதிகம் தருகிறார். இதைப் பலர் உணர்வதில்லை. அம்மனின் பிறந்தநாள் பூஜை மிக விசேஷமாக இங்கு நடக்கும். நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோவிலை கம்பீரமான முறையில் உருவாக்கியவர் நடிகர் டேனியல் பாலாஜி. அவருக்கு மனமார்ந்த நன்றியை அனைவரும் தெரிவிக்கின்றனர்.

 


 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.