Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிக்கு இலங்கை அரசின் விருதா?

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக 9பேரின் புகைபடத்தை இலங்கை அரசு வெளியிட்டது அதில் 3 பெண்களும் இருந்தனர் .இந்த நிலையில் மேலும் ஒரு புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர் குண்டு வெடிப்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் இலங்கை அரசின் உயரிய விருது பெற்றவர் என்ற ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . 

 

inshaf

இலங்கை தொடர்குண்டு வெடிப்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹிம் 2016 ஆம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் விருதை அப்போது அமைச்சராக   இருந்த  சுஜீவ சேனசிங்கவால் அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அந்த தீவிரவாதி விருது வாங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதில் அவனது தந்தையும் விருது வாங்கும் போது இருப்பதும் பதிவாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்