Skip to main content

பர்ஸை திருடி நாட்டுக்கு அவமானம் சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்...

Published on 01/10/2018 | Edited on 01/10/2018
pakistan


பாகிஸ்தானில் குவைத் நாட்டு அதிகாரிகளுடன் அந்நிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடந்துமுடிந்ததும், எல்லோரும் உணவருந்த சென்றனர். அப்போது நிதித்துறை செயலாளர் பதவியில் இருக்கும் பாகிஸ்தான் அதிகாரி ஜரார் ஹைதர்கான் என்பவர், தங்களின் நாட்டிற்கு வந்திற்கும் குவைத் அதிகாரியின் பர்ஸை எடுத்து தனது பாக்கட்டில் வைத்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியிருந்துள்ளது. பின்னர், இந்த வீடியோ வைரலாக. பாகிஸ்தான் அரசு அவரை பிடித்து விசாரணை நடத்தியது. இறுதியில் அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்