Skip to main content

மங்களூர் குக்கர் வெடிப்பு; சிசிடிவி காட்சிகள் வெளியீடு; ஷரிக் உடன் இருந்த மற்றொரு நபர் யார்?

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Mangalore cooker explosion; Output of CCD displays; Who was the other person with Sharik?

 

கர்நாடகா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த ‘பயங்கரவாதச் செயல்’. இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலக் காவல்துறை மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

 

சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஷரிக்கிற்கு நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷரிக், நாகர்கோவிலில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அஜிம் ரகுமான் என்பவருடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. ஷரிக் மற்றும் அஜிம் ரகுமான் இடையே ஏற்கனவே தொடர்பு உள்ளதா என்றும், செல்போனில் என்ன பேசி இருப்பார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் ஷரிக் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குக்கர் வெடிகுண்டுடன் வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு முன்னதாக ஷரிக் ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் ஷரிக் தனது தோளில் பையை சுமந்து செல்லும் காட்சி பேருந்து நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அவர் கொண்டு வந்த பையில் வெடித்த குக்கர் இருந்ததா என்ற வகையில் விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சியில் ஷரிக் மற்றும் மற்றொரு நபரும் இணைந்து பேசிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த மற்றொரு நபர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஷரிக்கிடம் வெடிபொருட்கள் இருந்து அதேபோல் அந்த மற்றொரு நபரிடமும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காந்தாரா' பட உண்மை நிகழ்வில் கலந்து கொண்ட அனுஷ்கா

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

anushka shetty attend bootha gola function in  Mangaluru

 

நடிகை அனுஷ்கா நடிப்பில் கடைசியாகத் தமிழில் 'பாகமதி' படம் வெளியானது. கடந்த 2018 ஆம் இப்படம் வெளியான நிலையில், அதன் பிறகு பெரியளவில் எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை. இப்போது தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு சமையல் கலைஞர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அனுஷ்கா மங்களூரில் நடந்த ‘பூத கோலா' விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பூத கோலா நிகழ்வு 'காந்தாரா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. காந்தாரா படம் கர்நாடக மக்களின் தெய்வ வழிபாடான பூத கோலா நிகழ்வை மையப்படுத்தி உருவாகியிருக்கும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனுஷ்காவின் சொந்த ஊர் மங்களூர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

காந்தாரா படம் வெளியான சமயத்தில், படக்குழுவினரையும்  ரிஷப் பி ஷெட்டியையும் பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனுஷ்கா பதிவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

Next Story

முழுவதும் என்.ஐ.ஏ வசமான மங்களூர் சம்பவ வழக்கு; உதகை உடற்கல்வி ஆசிரியரிடம் தீவிர விசாரணை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

 Mangalore incident case in full possession of NIA; A serious inquiry into the physical education teacher

 

கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில்,கர்நாடக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ விசாரணை வேண்டும் என இன்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த வழக்கு முழுவதுமாக என்.ஐ.ஏ வசம் சென்றுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவருக்கு உதகையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் என்பவர் சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இரண்டாவது நாளாக உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தரிடம் மங்களூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.