Skip to main content

கோவிஷீல்ட் விவகாரம்: முக்கிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்காத சீரம் - ஐரோப்பிய மருந்துகள் முகமை தகவல்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

SERUM INSTITUTE OF INDIA

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும், ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்குச் செல்வதற்கும் வசதியாக ஜூலை 1 முதல் 'கிரீன் பாஸ்' என்ற அனுமதிச் சீட்டு நடைமுறையைச் செயல்படுத்தியது.

 

ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த கிரீன் பாஸ் அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இதுவரை வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இதனால், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

 

இதனையடுத்து இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா உறுதியளித்தார். மேலும், ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் விண்ணப்பித்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்குள் ஐரோப்பிய மருந்துகள் முகமை கோவிஷீல்டிற்கு அனுமதி அளித்துவிடும் எனவும் ஆதார் பூனாவாலா கூறியிருந்தார்.

 

இந்தநிலையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அனுமதியளிப்பது குறித்து ஆய்வுசெய்ய, தடுப்பூசி தயாரிப்பாளர் முறையான சந்தைப்படுத்தல் அங்கீகார விண்ணப்பத்தை (marketing authorisation application) எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த விண்ணப்பம் இப்போதுவரை எங்களுக்கு வரவில்லை" என ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறியுள்ளது. கோவிஷீல்டிற்கு அங்கீகாரம் கேட்டு ஐரோப்பிய மருந்துகள் முகமையிடம் விண்ணப்பித்துவிட்டதாக ஆதார் பூனாவாலா கூறியிருந்த நிலையில், அதற்குண்டான விண்ணப்பங்களில் ஒன்று இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என ஐரோப்பிய மருந்துகள் முகமை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் 'கிரீன் பாஸ்' வழங்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

கரோனா தடுப்பூசிகள் விலை குறைப்பு!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Corona vaccine price reduction!

 

நாடு முழுவதும் நாளை (10/04/2022) முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

 

தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைத்துள்ளனர். அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுக்கு ரூபாய் 600 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ரூபாய் 225 ஆக சீரம் இன்ஸ்டிடூட் ஆஃப் இந்தியா குறைத்துள்ளது. இதேபோல், கோவாக்சின் மருந்தின் விலையையும் ரூபாய் 1,200- லிருந்து ரூபாய் 225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்து நிர்ணயித்துள்ளது. 

 

இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக, ரூபாய் 150 வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.