
இங்கிலாந்திலுள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நச்சுத்தாக்குதல் ரஷ்ய அரசாங்கம் நடத்தியிருந்தால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமேரிக்கா தெரிவித்திருந்தது.
முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகிய இருவரையும் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் ஒரு நகரில் மயக்கம் ஏற்பட்ட நிலையில் இருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று இறுதியில் உயிரிழந்தனர்.
இதற்கு காரணம் ரஷ்யாவே என்று பிரிட்டனை சேர்ந்த புலனாய்வு அமைப்பு ஒன்று தெரிவிக்க, ஆனால் ரஷ்யா இதை ஏற்க மறுத்தது.
'சர்வதேச சட்டத்துக்கு புறம்பாக ரசாயன அல்லது உயிரியல் ரீதியான ஆயுதங்களை தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக அந்த நாடு பயன்படுத்தியுள்ளது'' என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஹீதர் நாரெட் தெரிவித்தார்.
ரஷ்யா மீது அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய தடைகள் வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதியில் பிறப்பிக்கப்படலாம். முக்கிய மின்னணு சாதனங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்பான ஏற்றுமதிகள் இந்த புதிய தடைகளில் அடங்கும். இதனை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.