Skip to main content

'வாடகை ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை'- புஸ்ஸி ஆனந்த்தையே ஏமாற்றிய நிர்வாகி 

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Ambulance for rent sticker'-admin vijay makkal iyakkam

அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு அரசு மட்டுமல்லாது பல்வேறு தரப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. நடிகர் விஜய்யும் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட தலைவர் சபின் என்பவர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது. 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த ஆம்புலன்ஸ் சேவையை அண்மையில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்திருந்தார்.

விஜய் மக்கள் இயக்கம், மக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வாயிலாக செய்திகள் பரவின. விஜய் பாடலின் பின்னணியில் சர்..சர்... என சாலையில் ஆம்புலன்ஸ் பறக்கும் அலப்பறை காட்சிகள் வெளியாகி இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்ட இரண்டு நாளிலேயே அந்த ஆம்புலன்ஸ் மாயமானது. இந்நிலையில் மாயமான ஆம்புலன்ஸ் என்ன ஆனது என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இறுதியில் அது கன்னியாகுமரியில் காருண்யா ஆம்புலன்ஸ் சேவை என்ற பெயரில் இயங்கி வந்தது தெரிய வந்ததுள்ளது. அதன் பின்னரே இந்த சம்பவத்தின் முழு தகவல் வெளியானது.

விஜய் மக்கள் நிர்வாகியான சபின் நடிகர் விஜய்யின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக காருண்யா ஆம்புலன்ஸ் உரிமையாளர் சுனில் என்பவரிடம் தனக்கு இரண்டு நாட்கள் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என கேட்டு எடுத்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு 'தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரத்திற்காக நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு சேவைக்காக இலவசமாக இந்த ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது என பிரபலப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாது வாடகைக்கு எடுத்து வந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்சை புஸ்ஸி ஆனந்தை வைத்து தொடங்கி வைத்தார். ஆனால் அந்த ஆம்புலன்ஸின் உரிமையாளரான சுனில் தன்னிடம் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆம்புலன்ஸில் 'விஜய் மக்கள் இயக்கம்' என ஸ்டிக்கரை ஒட்டி இயக்குவதை அறிந்து ஆம்புலன்ஸை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து மற்ற நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.