Skip to main content

கணவனின் குடிப்பழக்கத்தால் மனைவி எடுத்த விபரீத முடிவு... மூன்று உயிர்கள் பறிபோன சோகம்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Husband's drinking .. Suspicion .. Woman passes away by jumping into well with children!

 

குடிப்பழக்கமும் மனைவி மீதான சந்தேகமும் ஒரு குடும்பத்தில் 3 உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றன. 


விருதுநகர் – தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் 11 ஆண்டுகளுக்கு முன், தனது உறவுக்காரப் பெண்ணான லட்சுமி பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு தர்ஷினி பிரியா (வயது 9), சிவசண்முகவேல் (வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

விடமுடியாத மதுப்பழக்கத்தால், மனைவி லட்சுமிபிரியா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வது, சிவகுமாருக்கு வாடிக்கையாகிப்போனது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பல தடவை சிவகுமாரிடம் ‘நான் செத்துருவேன்..’ என்று லட்சுமி பிரியா கூறிவந்துள்ளார். 

 

இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி பிரியா யாருடனோ செல்ஃபோனில் பேசியதைப் பார்த்து சந்தேகம்கொண்ட சிவகுமார், பிரச்சனை செய்திருக்கிறார். ஏற்கனவே நொந்துபோயிருந்த லட்சுமிபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு பாழடைந்த கிணற்றுக்குச் சென்றுள்ளார். இரு குழந்தைகளையும் தன் உடலுடன் சேர்த்து சேலையால் கட்டிக்கொண்டு, பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். மூவரும் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள்.

 

மூன்று உடல்களையும் விருதுநகர் தீயணைப்பு படையினர் மீட்ட நிலையில், வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.