Skip to main content

போலீசார் தாக்கியதில் முதியவர் பலி? - மனைவி புகார்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Wife complains that husband passed away in police attack?

 

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் பகுதியில் உள்ளது சு. பில்ராம்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் அருகே அதே ஊரைச் சேர்ந்த 67 வயது உலகநாதன் என்ற பெரியவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். நேற்று (06.12.2021) மாலை அரகண்டநல்லூர் போலீசார் உலகநாதன் கடைக்குச்  சென்று அரசு டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தக் கூடாது எனவே கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது பெரியவர் உலகநாதன், நான் இங்கு நான்கு வருடமாக கடை நடத்திவருகிறேன்.

 

அப்படியிருக்கும்போது என் கடையைத் திடீரென வந்து காலி செய்ய சொல்வது ஏன்? என்று எதிர்த்து கேள்வி கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபமடைந்த போலீசார், உலகநாதனிடம் பெட்டிக்கடையை மூடிவிட்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் உலகநாதனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் உலகநாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த அவரது மனைவி ராணி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து உலகநாதனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உலகநாதன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தனது கணவர் இறப்பு குறித்து அவரது மனைவி ராணி விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் பெட்டிக்கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, மிட்டாய், பிஸ்கட், சுண்டல், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சிறிய அளவில் வைத்து விற்பனை செய்துவந்தார்.

 

இந்த நிலையில், நேற்று 4 போலீசார் அவரது கடைக்குச் சென்று வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். எனது கணவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவரை அடிக்க முயன்றனர். அதை என் கணவர் தடுத்துள்ளார். போலீசார் லத்தியால் தாக்கியதில் எனது கணவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது கணவர் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் தாக்குதலில் வயதான முதியவர் இறந்து போனதாக கூறி சு. பில்ராம்பட்டு கிராம மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.