Skip to main content

'ஏன் என்னை பார்த்து சிரித்தீர்கள்?' - ரணகளமான ஹோட்டல்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

'Why did you look at me and smile?' - Battlefield Hotel!

 

தூத்துக்குடியில் ஹோட்டலில் சாப்பிட வந்த இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹோட்டல் கடையே ரணகளமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராமசாமி தாஸ் பார்க் எதிரே தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. நேற்று (22.09.2021) இரவு அந்த ஹோட்டலில் நாகராஜ், அஜித், பால்ராஜ், அருண்குமார், சங்கரநாராயணன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். அதேபோல் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முருகன், பிரசாந்த், சிவராமன் ஆகியோர் அவர்களுக்கு அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி அந்த தனியார் ஹோட்டலில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் என்பதால், அந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்களுடன் சகஜமாக பேசிக்கொள்வது வழக்கமாம். அப்படி ஊழியர்களுடன் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த முருகன் தரப்பினர் தங்களைப் பற்றி பேசி சிரிப்பதாக நினைத்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில், “எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள்” என கேட்டுள்ளனர். “இல்லை” என்று அருண்குமார் தரப்பு மறுத்த நிலையில், பேச்சு வாக்குவாதமானது. பின்னர் சாப்பிட்டதற்கான பில்லைக் கொடுத்துவிட்டு அருண்குமார் தரப்பு கிளம்ப இருந்த நிலையில், ”ஏன் எங்களைப் பார்த்து சிரித்தீர்கள்” என்று மீண்டும் கேட்க, வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இந்த மோதலில் ஹோட்டலில் இருந்த சேர், குழம்பு வாளி போன்றவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பான காட்சிகள் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாரளிக்க, உடனடியாக வந்த காவல்துறையினர் இருதரப்பையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். மேலும், கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.