Skip to main content

மூன்று பேரை திருமணம் செய்த இளம்பெண்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

villupuram district  incident police investigation started 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் புதுச்சேரி திருபுவனை பாளையத்தைச் சேர்ந்த ரம்யாவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், தோழியைச் சந்திக்கப் போவதாக கண்ணனை அழைத்து சென்ற ரம்யா வேடசந்தூரில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 3 மாதங்களுக்குப் பிறகுதான் ரம்யாவுக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நடந்தது கண்ணனுக்கு தெரியவந்தது. இருப்பினும், கண்ணன் ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். கர்ப்பமடைந்த ரம்யாவுக்கு வளைகாப்பு செய்து அவரின் தாய் வீட்டிற்கு கண்ணன் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, குழந்தை இறந்து பிறந்ததால் அடக்கம் செய்துவிட்டதாக கண்ணனிடம் ரம்யா தெரிவித்திருக்கிறார். அதனால் கண்ணன் ஒரு மாதம் ரம்யாவை தாய் வீட்டிலேயே இருக்க வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அதன்பின் ஒரு மாத காலம் ஆன பிறகு ரம்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல கண்ணன் வரவே, ரம்யா ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.

 

இந்நிலையில், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டு இருந்த கண்ணன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பைக்கில் புதிதாக ஒரு இளைஞருடன் தனது மனைவி ரம்யா செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அந்த பைக்கை வழிமறித்து விசாரித்த போது ரம்யா கண்ணனை பார்த்து யார் நீ எனக் கேட்டுள்ளார். இவ்விவகாரம் காவல்நிலையம் சென்றதையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, நான் கண்ணனோடு இருந்த போது கர்ப்பமாகவில்லை. அது வெறும் நீர்க்கட்டி என ரம்யா தெரிவித்திருக்கிறார். இதனிடையே மூன்றாவது திருமணம் செய்து  கொண்ட இளைஞர் ரம்யாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றது தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதை அனைத்தையும் கேட்டுக்கொண்ட போலீசார் ரம்யாவின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கின்றனர். பட்டதாரியான இந்த இளம் பெண் மூன்று வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.