Skip to main content

பிரச்சனையை தீர்க்கணுமா? புது ரூட் போட்டு தீபாவளிக்குள் வசூல் வேட்டை!!!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
dddd

 

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், போனஸ் என்று உற்சாகமாக பெறும் தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, அரசாங்க ஊழியர்களுக்கு அரசே போனஸ் வழங்கி மகிழ்விக்கிறது. இப்படி சலுகைகள் வழங்கபட்டாலும், இவற்றையெல்லாம் தாண்டி புது ரூட் போட்டு பணம் வசூலிக்கும் முறையை காவல்துறை துவங்கி உள்ளது. 

 

திருச்சி மாவட்டத்தை சுற்றி 14 யூனியன் பஞ்சாயத்துகள் உள்ளது. அதில் 404 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடங்கி உள்ளது. கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் விழிப்புணர்வு கொடுக்க வந்த அதிகாரிகள், காவல் துறையினரோடு நல்ல நட்பை உருவாக்கியுள்ளனர். அந்த நட்பின் மூலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஒவ்வொரு கிராம ஊராட்சி தலைவர்கள் தீபாவளி பரிசாக 3000  ரூபாய் கொடுத்து கவனித்துள்ளனர். அதே போல் தீயணைப்பு துறைக்கும் அந்தந்த ஊராட்சி சார்பில் அதன்  தலைவர்கள் கவனித்துள்ளனர். 

 

இந்த கவனிப்பின் நோக்கம் பற்றி விசாரித்தபோது, நாளை எந்தவித சட்டம் & ஒழுங்கு பிரச்சனை வந்தாலும் ஊராட்சி தலைவருக்கு சாதகமாக அமையும்படி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கவனிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வாய் மொழி ஒப்பந்தத்தை ஒரு சில புறநகர் காவல் நிலையங்கள் மிக மும்மரமாக செயல்படுத்தி தீபாவளிக்குள் வசூல் வேட்டையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் (படங்கள்)

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

சென்னை பெருநகர காவல்  ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப இன்று (10-11-23) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர்,  ரங்கநாதன் தெரு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

Next Story

தீபாவளி போனஸில் திக்குமுக்காடிய ஊழியர்கள்!

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

The owner made the employees happy with a Diwali Gift

 

தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை போனசாக வழங்குவது வழக்கம். இதில் சில தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருட்களாகவும் தங்களது தீபாவளி போனஸை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மோட்டார் சைக்கிளை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அந்தப் பகுதியில் தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி எனப் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிவக்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

 

இந்த நிலையில், இந்த வருடம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையின் போது விலை உயர்ந்த பரிசைக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய சிவக்குமார், தனது நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு, அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்ட போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர். அதனைக் கேட்டுக்கொண்ட சிவக்குமார் அவர்கள் விரும்பும் வாகனங்களை முன்பதிவு செய்து தனது நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளார். 

 

அதன் பின்னர் அவர், அந்த 15 ஊழியர்களையும் வரவழைத்து, தீபாவளி பரிசாக மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை அவர்களிடம் கொடுத்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அத்துடன், அந்த 15 ஊழியர்களுடன் தானும் ஒரு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.