Published on 15/08/2018 | Edited on 15/08/2018

கன்னியாகுமரியில் மாங்காடு என்ற கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாங்காடு எனும் கிராமப்பகுதியில் இன்று காலை முதலே வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியிலுள்ள மக்களை டியூப் படகு உதவியுடன் தீயணைப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.
மேலும் இன்னும் பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த வெள்ளநீரில் சிக்கி தவித்து வருகின்றனர் அவர்களை மீட்கவும் துரித நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.