Skip to main content

இரவில் எங்களை அனுமதியுங்கள்... ஆட்சியரிடம் மனு அளித்த ஃபோட்டோகிராபர் சங்கத்தினர்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

Video and Photographers Association who petitioned the Collector ..!

 

திருச்சி வீடியோ தொழில்நுட்பக் கலைஞர்களை இரவு நேரத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடத்தில் வீடியோ மற்றும் ஃபோட்டோகிரபர் சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழகத்தில் 2ம் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

 

இந்நிலையில், திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் ஃபோட்டோ ஔிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் நிக்சன் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் ராஜாராம், ஜீவானந்தம், கென்னடி ஜூல்ஃபி அகமத் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்தனர்.  அதில்,

 

"திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் ஃபோட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் தற்போது 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுக்கு முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணங்கள் தான் வாழ்வாதாரமாகும். பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. மற்ற நாட்களில் ஒரு சில திருமணங்கள் மற்றும் பல்வேறு பொது நிகழ்வுகள் நடைபெறுகிறது. நிகழ்வுகள் பெரும்பாலும் இரவு 10.00 மணிக்கு மேல் முடிந்து பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது. 

 

எனவே, வீடியோ தொழில்நுட்பக் கலைஞர்கள் நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும்போது, எங்களைப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்" என மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அனுமதி வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யா சிவாவின் மனு; ‘போலீஸ் பாதுகாப்பு பேஷனாக மாறிவிட்டது?’ - நீதிபதி பரபரப்பு கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Judge sensational comment for Surya Siva petition

கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

Next Story

 ‘ஸ்மைல் ப்ளீஸ்’ - புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்த முதல்வர்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

Chief Stalin who photographed the photographer

 

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சிறந்த புகைப்படங்களுக்கு பாராட்டுக்களும், விருதுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றனர். சிலர் தனக்குப் பிடித்தவற்றைப் புகைப்படமாக எடுத்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும் புகைப்பட கலைஞர்களுக்குப் பலரும் நேரிலோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்களைப் புகைப்படம் எடுத்து தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். மேலும் அதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.