Skip to main content

கோயில் பூசாரி மர்ம கொலை!!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
police

 

 

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது வடவாம்பலம். இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டபாணி மகன் தனசேகரன், வயது 45. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் சத்யா, பவானி என இரண்டு மகள்களும் உள்ளனர். தனசேகரன் அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் பூசாரியாக பணி செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம், தனசேகரன் மற்றும் மனைவி, மகள்கள் வழக்கம்போல்  வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். தனசேகரன் மட்டும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு கதவுக்கு அருகில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டதும் அவரது மனைவி மகள்கள் எழுந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது தனசேகரன் தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பூசாரி தனசேகரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இவர்கள் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கம் இருந்த மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

 

உடனடியாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

பூசாரி தனசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தனசேகரன் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த வளவனூர் போலீசார் முதற்கட்டமாக அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் சத்யா பவானி ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அங்காளம்மன் கோயில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்