Skip to main content

திருச்சியில் ஸ்டாலின் கைதை கண்டித்து சாலை மறியல்

Published on 01/04/2018 | Edited on 01/04/2018


 

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பச்சைத்துண்டு அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். 
 

ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சியில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்ச கே.என்.நேரு ஸ்டாலினுடன் சேர்ந்து கைதானதால் திருச்சியில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் மத்திய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியசாமி, கே.என்.சேகரன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசெல்வம், குடமுருட்டி மற்றும் இளைஞர் அணியினர், வட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் ஏராளமானோர் கைதானார்கள்.
 

சார்ந்த செய்திகள்