Skip to main content

'2019-ல் மொத்தம் 8 புயல்கள்'- வானிலை ஆய்வு மையம்

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 A total of 8 storms in 2019- Meteorological Center


வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததை அடுத்து தற்போது இன்னும் நான்கு நாட்கள் வடகிழக்கு பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  தெரிவித்துள்ளார்.

மேலும், 2019 ஆம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் 4 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த ஓராண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் 943 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய நிலையில் 907 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. 

அதேபோல் 2019 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் 3, அரபிக்கடலில் 5 என மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளது எனவும் தெரிவிதுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்