Skip to main content

நடு இரவு பயங்கரம்!!! டாக்டர் வெட்டிக் கொலை... உடல் கிணற்றில் வீச்சு... கூலிப்படையா? விசாரணையில் போலீஸ்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
siddha doctor



நடு இரவில் முன் பகை காரணமாக சித்தா டாக்டர் ஒருவர் கடத்திக் கோரத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இதில் கூலிப் படைக்கு தொடர்புண்டா என்ற கோணத்தில் விசாரணை போகிறது.


நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகே மேல பண்டாரபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி (34). ஹோமியோபதி டாக்டரான திருப்பதி தினமும் காலை முதல் மதியம் வரை சாத்தான்குளத்திலும், மதியம் முதல் இரவு வரை திசையன்விளை பேரூராட்சி எதிரேயுள்ள கிளினிக்கிலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவிட்டு பைக்கில் திரும்புபவர். சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு கிளினிக் வேலைகளை முடித்துவிட்டு தன் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.

 

 


இட்டமொழியிலிருந்து மேல பண்டார புரம் செல்லும் சாலைவிலக்கு அருகே வந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென்று பைக்கை மறித்துத் தள்ளி, திருப்பதியை அரிவாளால் சராமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியான திருப்பதியின் வயிற்றுப் பகுதியில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளதாம். பின்னர் பைக்கையும் அவரது உடலையும் கிணற்றில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறது மர்மகும்பல்.

 


இரவு நேரமாகியும் திருப்பதி வராததால் அவரது சகோதரர்கள், உறவினர்கள் இரவு அவர் வழக்கமாக வரும் பாதையில் தேடியுள்ளனர். விலக்குச் சாலையில் ரத்தக் கறையும் தலைமுடியும் கிடந்ததால் பதறியவர்கள் தொடர்ந்து பார்த்ததில் கிணற்றில் பைக்கும் உடலும் கிடந்ததால் அதிர்ச்சியானார்கள். டாக்டரின் சகோதரர் ரமேஷ் புகார் தர, ஸ்பாட்டுக்கு வந்த திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜூடி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் இரவு வெகுநேரம் போராடி உடலையும், பைக்கையும் மீட்டனர். உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைக் கிளப்பியிருக்கிறார்.

 

 

 


திருப்பதிக்கும் மற்றொரு தரப்பினருக்குமிடையே இடத்தகராறு இருந்துவருவது தொடர்பான சிவில் வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. எதிர்தரப்பினரால் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தந்தை, மகன் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 


திருமணமான டாக்டர் திருப்பதிக்கு ஷீபா என்ற மனைவியும், இரண்டரை வயதில் பெண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். பிள்ளைகளோடு தாய்வீடு சென்றிருந்த மனைவி ஷீபா, கொலை செய்தியறிந்து இளம் பிள்ளைகளோடு கதறியது பரிதாபம்.
 

 

இந்தக் கோரம் கூலிப்படையால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று திடமாக நம்பும் போலீசார், அந்தக் கோணத்திலும் பார்வையை திருப்பியுள்ளனர். கரோனாவின் கொடூரம் ஒரு பக்கம், மாவட்டத்தில் கூலிப்படையின் ரீஎன்ட்ரீ மறுபக்கம்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.