Skip to main content

லஞ்சம் வாங்கியபோது சிக்கிய சார்பதிவாளர்; கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

 tindivanam registrar arrested for taking Rs 50000 bribe

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் பழைய நீதிமன்றம் அருகில் தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் திண்டிவனம் அருகிலுள்ள பாங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவரது மகன் பிரகாஷ்(43) என்பவர் தனது  தந்தை தேவதாஸ் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு தான செட்டில்மென்ட் மூலம் எழுதி வாங்குவதற்காக ஆவண எழுத்தர் சரவணன் என்பவரை அணுகியுள்ளார். திண்டிவனத்தை சேர்ந்த சரவணன் பத்திர பதிவு அலுவலகத்திற்கு அருகில் ஆவண எழுத்தராக அலுவலகம் வைத்து செயல்பட்டு வருகிறார்

 

இதையடுத்து ஆவண எழுத்தர் சரவணன், பிரகாஷ் தந்தை பெயரில் உள்ள சொத்தை தான செட்டில்மென்ட் மூலம் எழுதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். அதன்படி நேற்று (29.3.2022) தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இதற்கு முன்பே சார்பதிவாளர் சங்கரலிங்கம் ஆவண எழுத்தர் சரவணன் மூலம் பிரகாஷிடன் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பேரம் பேசியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ்  இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் ஆய்வாளர் அன்பழகன் மற்றும் போலீசார் மறைந்திருந்தனர். இந்த நேரத்தில் பிரகாஷ், பத்திர எழுத்தர் சரவணன், பிரகாஷின் தந்தை மற்றும் சாட்சிகளுடன் நேற்று(29.3.2022) சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தைப் பதிவு செய்ய சென்றனர். அப்போது பிரகாஷ், பதிவாளர் சங்கரலிங்கத்துக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்துள்ளார்.

 

இந்நிலையில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் சங்கரலிங்கம், ஆவண எழுத்தர் சரவணன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும்  அவர்களிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்ததோடு, சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

மேலும் இது குறித்து ஏடிஎஸ்பி  தேவநாதன் கூறுகையில், " அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து பொதுமக்கள் தைரியமாக எங்களுக்கு புகார் தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரம் தயாராக உள்ளோம்" என்று கூறினார். இச்சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.