Skip to main content

இந்தப் புகை வாழ்வு எப்போது நீங்கும்?

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

fire on Garbage Depot in erode

 

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் பாதி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கிலும், மீதி வைரம்பாளையம் குப்பைக் கிடங்கிலும் வழக்கமாகக் கொட்டப்பட்டு  வருகிறது. குறிப்பாக வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் மிகப் பெரிய அளவில் மலைபோல் தேங்கி உள்ளது.

 

இந்தக் குப்பை கிடங்கில் அவ்வபோது தீ விபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் இங்கு குப்பைகள் சேர்ந்து வந்தது. இந்தக் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

 

fire on Garbage Depot in erode

 

வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேருவதைத் தடுக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் உரமாக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் ஓரளவு குப்பைகள் குறைந்துள்ளது. இந்த நிலையில் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதனால் எழுந்த கரும்புகை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பரவியது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பொது மக்கள் மூச்சு விடுதலில் சிரமம், கண் எரிச்சல் போன்றவற்றினால் அவதிப்பட்டனர்.

 

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வண்டிகளும், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வண்டியும் சம்பவ இடத்திற்கு வந்தது. 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோக மாநகராட்சியில் உள்ள 10 குடிநீர் லாரிகள் அந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அதன் மூலமும் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு வரை  தீயணைக்கும் பணி  தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தீ ஒரளவு கட்டுக்குள் வந்தது எனினும் தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் இன்னும் அப்பகுதியில் சூழ்ந்துள்ளது.  இரவு லேசான மழை பெய்தது இதனால் புகைமூட்டம் அதிகளவில் உள்ளது. இன்று மூன்றாவது  நாளாக புகைமூட்டம் ஆங்காங்கே பரவிக் கொண்டே வர, அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு என பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புகைவாழ்வு எப்போது நீங்கும் என மக்கள் பரிதாபத்துடன் கேட்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.