Skip to main content

மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

Three children passed away mother hospitalized

 

திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளி பரசுராமன். இவரது மனைவி அமுதா. இந்தத் தம்பதிக்கு 5 வயதான நிலவரசு, 4 வயதான குறலரசு, 3 வயதான யாஷினி என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

 

பரசுராமனுக்கும் அவரது மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. சண்டை அதிகமாகும்போது அமுதா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். உறவினர்கள், குடும்பத்தினர் சமாதானத்துக்குப் பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து மீண்டும் கணவருடன் வாழ்வார்.

 

ஆகஸ்ட் 3ம் தேதி இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்ளாமலே இருந்துள்ளனர். 

 

இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி மதியம் சதாகுப்பம் கிராமம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை தாய் அமுதா, வீசியதால் அவர்கள் தண்ணீர் குடித்து அழுதபடி இறந்துள்ளனர். 

 

இறுதியில் அமுதாவும் தற்கொலை செய்துக்கொள்ள ஆற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அமுதாவை ஆற்றில் இருந்து மீட்டனர். தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமுதாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

நீரில் மூழ்கிய குழந்தைகளை பலரும் ஆற்றில் குதித்து தேடினர். வெகுநேர தேடலுக்கு பிறகு மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த வாணாபுரம் காவல்துறையினர் சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற பிள்ளைகளை தாயே ஆற்றில் வீசி கொலை செய்ததும், அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வாணாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.