Skip to main content

திருவாரூரில் கஜா நிவாரண பொருள் வழங்குவதில் ஊழல்- பொதுமக்கள் சாலை மறியல்;-

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
pe

திருவாரூர் அருகே கஜா நிவாரண பொருட்களை வழங்காமல்   முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை பதவி நீக்க கோரி  100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை, முறைகேடு நடப்பதாகவும், ஒருசாராருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் திருவாரூர் அருகே குளிக்கரையில் நேற்று இரவு தனியார் திருமணமண்டபத்தில் ஆனைவடபாதி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், குளிக்கரை உள்ளிட்ட 4 ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண பொருட்கள்வைக்கப்பட்டிருந்து. இந்த நிவாரண பொருட்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில் நிவாரணப் பொருட்களை வழங்காமல் நேற்று நள்ளிரவில் கிராம நிர்வாக அலுவலர்கள் திலகவதி, துர்கா ராணி இருவரும் நிவாரணப் பொருட்களை
வாகனங்களில் ஏற்றி வேறு பகுதிக்கு எடுத்து செல்ல முயன்றபோது அவர்களை அப்பகுதிமக்கள் சிறை பிடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து
அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டு இன்று காலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தனர்.

 

ஆனால் இன்று காலையில் முதலே பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகள் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் மதியம் ஆனாதே தவிர வருவதாக தெரியவில்லை, இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு மேப்பளம் என்ற இடத்தில் அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்கிட வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது நிவாரண பொருடகள் வழங்காமல் முறைகேடில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை ஏற்று அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக மன்னார்குடி - திருவாரூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக  பாதிக்கப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.