Skip to main content

தஞ்சையில் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை... 3 பேரிடம் விசாரணை!

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

thanjai incident... Investigation of 3 persons!

 

தஞ்சை மாவட்டம் தோழகிரிபட்டியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சம்பத்தப்பட்ட இளம்பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் வீட்டுக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்பொழுது தோழகிரிபட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த குடியரசு என்ற இளைஞர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தன்னை வீட்டில் விடுவதாகவும் தன்னுடன் வரும்படியும் அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணிடம் கூற, அந்த பெண்ணோ மறுத்துள்ளார். இறுதியில் அப்பெண்ணின் கைப்பை மற்றும் செல்போனை குடியரசு பிடுங்கி கொள்ள அந்த பெண்ணும் அவருடன் இருசக்கர வாகனத்தில் செல்ல இசைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குடியரசு அந்த இளம்பெண்ணை அந்த பகுதியில் உள்ள முந்திரிதோப்புக்கு அழைத்து சென்றுள்ளார்.

 

இதனால் அச்சமடைந்த இளம்பெண் கூச்சலிட்ட நிலையில் அங்கே ஏற்கனவே குடியரசுவின் மூன்று நண்பர்கள் (சாமிநாதன், கண்ணன், தமிழரசன்) இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இளம்பெண்ணின் வாயினை கட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த இளம்பெண் தஞ்சை வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கண்ணன் என்ற நபர் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.