Skip to main content

இறந்த கோவில் காளை! 18 மந்தை மக்கள் அழுது அஞ்சலி!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

தை மாதம் பிறந்தது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில்  ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக கிராமங்கள் தோறும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 18 மந்தை மக்கள் சேர்ந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தி சம்பவம் பெரிய ஆச்சரியத்தையும், மனித நேயத்தையும் எடுத்துக்காட்டுவதாகவும்  உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டாம்பட்டி அருகே பேர் நாயக்கனூர் உள்ளது. இங்கு பெருமாள்சாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவில் ஆண்டுதோறும் எருது ஓட்டம் நடைபெறும்.

 

temple bull! 18  People Crying


இதற்காக ஊர் சார்பாக பூமிராஜ் என்பவர் காளை மாடு வளர்த்து வந்தார். திருவிழாக்காலங்களில் முக்கிய பண்டிகைகள் அன்று நடக்கும் எருது ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பெருமாள் சாமி கோயில் காளை சில ஆண்டுகளாக பல ஊர்களுக்குச் சென்று எருது ஓட்டப் போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை பெற்று ஊருக்கு பெருமை சேர்த்து மிகப்பெரிய பிரபலம் அடைந்தது.

அந்த பகுதிகளில் அந்த எருதை கொண்டாடி வந்தனர். இந்த எருது அந்த கோவிலுக்கும், அந்த பகுதி மக்களுக்கும் பெரிய மதிப்பையே ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில் வயது முதிர்வு உடல்நிலை பாதிப்பு காரணமாக பெருமாள் சாமி கோயில் காளை திடீரென இறந்தது.

 கோவில் காளை இறந்த செய்தி அந்த பகுதி மக்களையே பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கோவில் காளையின் இறுதி நிகழ்ச்சியை பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் 18 ஊர்களுக்கும் 18 மந்தை சார்ந்த மக்களுக்கும் கோயில் காளை இறந்தது என தெரிவித்தனர்.

18 ஊர்மக்களும் மேளதாளத்துடன் வந்து இறந்த காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுமி, தேவர் ஆட்டம், கோலாட்டம், பெண்கள் ஒப்பாரி வைத்து இறுதி மரியாதை செய்தனர். பின்னர் சடங்குகள் செய்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காளையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.