Skip to main content

தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்; ஆசிரியர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களிடையே காணப்படும் அடிப்படை ஊதிய வேறுபாடு தொடர்பாக "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வருகிறது.  

 

ஐந்தாவது நாளாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், இதுவரை 144 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதால், மேலும் பல ஆசிரியர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்