Skip to main content

காய்கறி கடையை விட டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

தங்களது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் நமது குடிமக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள். கரோனா வைரல் பரவலை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர்  மோடி  ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசு நிர்வாகமும் இதை அறிவித்துள்ளது.

 

 Crowd



ஈரோடு நகரில் காய்கறி மார்க்கெட்டாக நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஈரோடு மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஓசூர், கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் தினசரி காய்கறிகளை கொள்முதல் செய்வதும் அதை விற்பனை செய்வதும் வழக்கம். இந்த மார்க்கெட்டில் மாவட்த்தில் உள்ள கிராமப்புறங்களில் மளிகை கடை நடத்தும் வியாபாரிகள் மொத்த விலையிலும், நகர மக்கள் சில்லரை விலையிலும் காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.  இந்தநிலையில், 22ம் தேதி ஞாயிற்றுகிழமை மத்திய, மாநில அரசுகளின் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளது. இதனால், நேதாஜி தினசரி சந்தையில்  காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளனர். இதனால், சனிக்கிழமை  அதிகாலை முதலே மாலை வரை  காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.


 

அதே போல் தான்  டாஸ்மாக்  கடைக்கும்  ஞாயிறு விடுமுறை என அரசு  அறிவித்துள்ளதால்  இன்று பகல் முதல் டாஸ்மாக் மது கடைகளுக்கு வழக்கத்தை விட குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுகிழமைக்கும் சேர்த்து மதுபானங்களை கூடுதலாக  குடிமகன்கள் வாங்கி சென்றனர்.
 

அதில் ஒரு குடிமகன், அது தான் பிரதமர் மோடியே சொல்லிட்டாரு எல்லோரும் வீட்டிலேயே இருங்கனும், அப்புறம் என்ன வீட்டிலே எப்படி தனியா இருக்க முடியும் சரக்க போட்டுட்டா நேரம் போறது தெரியாது, அதுக்குதான் ஒன்னுக்கு ரெண்டு பாட்டில்" என்றார் ஜாலியாக. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் குடிமகன்கள் உஷாராகத்தான் இருக்காங்க சார் என்றார் டாஸ்மாக் பணியாளர் ஒருவர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.