Published on 21/04/2020 | Edited on 21/04/2020
கரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர்கள், நடிகைகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பிரதமரின் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றன.
![tamilnadu cm relief fund rs 160.93 crores tn govt announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/HhI7QcMj6CAmjuJ_jMsm9ahYZW8JAf3-zqUnNF63o8c/1587456183/sites/default/files/inline-images/C4333.jpg)
அந்த வகையில் கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 160,93 கோடி வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ரூபாய் 5 கோடியை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.