Skip to main content

தமிழகம்- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து... தமிழக அரசு அனுமதி!

Published on 22/11/2020 | Edited on 22/11/2020

 

tamilnadu to andra pradesh bus service tn govt

தமிழகம்- ஆந்திரா மாநிலத்திற்கு இடையே பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

 

தமிழகத்தில் இருந்து வரும் நவம்பர் 25- ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

 

ஏற்கனவே புதுச்சேரி, கர்நாடகா மாநில பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது ஆந்திர மாநிலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்