Skip to main content

மாற்றத்தை பற்றி பேசும் தலைவர்களே, இளைஞர்களே,அரசியல் ஆய்வாளர்களே...சீமான் பேட்டி

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

இலங்கை தமிழர் படுகொலையில் பாரதிய ஜனதா காங்கிரஸ் மீது தற்போது குற்றம்சாட்டுவது தார்மீக நேர்மை அல்ல, எப்படி என்றால் போரை நடத்தியது காங்கிரஸ் ஆட்சி அதற்கு கூட நின்றது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும். ஆனால் அன்றைய வலிமையான எதிர்க்கட்சி பாஜக, ஒரு 2ஜி அலைக்கற்றை ஊழலுக்காக ஒரு மாசம் முப்பது நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கிபோட்ட பாரதிய ஜனதா கட்சி  இலங்கை என்கிற பக்கத்து நாடு மக்களை கொன்றுகுவித்தபோது எங்களைப் போன்று இன சாவு என்று நீங்கள்  கதற வேண்டாம் ஒரு மனிதப்படுகொலை என்கின்ற முறையில் ஏதாவது அதை தடுக்க ஒரு வார்த்தை, ஒரு உறுப்பினர் பதிவு செய்ததை நீங்கள் பார்த்ததுண்டா. அன்று வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அதன் பிறகு ஐநாவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன் மொழியும் போது நாம் எப்பொழுதும் சிங்களர் பக்கம் தான் நிற்க வேண்டும் அத்வானி பேசிய  பதிவுகள் எல்லாம் இன்றும் உள்ளது.

 

seeman

 

சிங்களர்கள் ராமனின் வாரிசுகள் வம்சாவளியினர் தமிழர்கள் இராவணனின் வம்சாவளியினர் எனவே சிங்களர் பக்கம்தான் நிற்க வேண்டும் என்று பேசிய பதிவுகள் எல்லாம் இருக்கிறது. காங்கிரஸ் கொன்றுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அன்று பாஜக செய்தது என்ன?

 

 

கூட்டணி பற்றிய கேள்விக்கு.. 

 

நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள் என்றால் கூட்டணி வைத்தாலும் திட்டுவது கூட்டணி வைக்காமல் தனியாக நின்றாலும் திட்டுவது இது ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

 

 மாற்று என்பது எப்படி, நானாவது இன்னொரு தலைமுறை பிள்ளைகளுக்கு நம்பிக்கையாக நின்று விட்டு போகிறேனே. நீங்க ஏன் என் தற்காலிக வெற்றியைப் பற்றிக் கவலைப்பட சொல்கிறீர்கள்.  கூட்டணி வைத்து வென்றவர்கள் சாதித்தது என்ன?

 

எல்லாருமே வருவது மாற்றம் மாற்றம் என்று சொல்வது பிறகு  அவர்களுடனே சேர்ந்து பெரிய ஏமாற்றத்தை கொடுப்பது. மாற்றம் என்று பேசுகிற தலைவர்கள், மாற்றத்தை பற்றி சிந்திக்கும்  இளைஞர்கள், அரசியல் ஆய்வாளர்களிடம் நான் கேட்பது எதில்  இருந்து மாற்று, எப்படிப்பட்ட மாற்று எந்த கட்சியின் ஆட்சியில் இருந்து மாற்றத்தை கேட்கிறீர்கள். 

 

மாற்றம் என்று பேசிவிட்டு பின்னர் அவர்கள் கூடவே துணை நின்று அவர்களே ஆட்சி அமைக்கக் செய்வது   என்பது எப்படி  மாற்றமாக இருக்கும்.  அது பெரிய ஏமாற்றமாகதானே இருக்கும். அதை செய்ய நாங்கள் தயாராக இல்லை. அதனால் நாங்கள் தனித்துதான்  போட்டியிடுகிறோம். எங்களுக்கு தனித்த தத்துவம் இருக்கிறது. நாங்கள் தனித்து பாதையை கொண்டிருக்கிறோம் எனவே தனியாக தொடர்ச்சியாக பயணிப்போம் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.