Skip to main content

புலி போல் எந்த தமிழ் பெண்ணும் வெகுண்டு எழுவார்கள் -தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

Published on 10/03/2018 | Edited on 10/03/2018


 

tamilisai soundararajan

 

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் பிரசார நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, பா.ஜ.க., தூத்துக்குடி மாவட்ட மகளிரணி பொதுசெயலாளர் நெல்லையம்மாளுக்கும் அய்யாக்கண்ணுவுக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் நெல்லையம்மாள் தாக்கப்பட்டதாக கூறி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், 
 

அய்யாக்கண்ணு மற்றும் அவர்களோடு வந்தவர்களும் தாக்கியதால் நெல்லையம்மாள் நெஞ்சுவலியால் சிரமப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிக தவறான வார்த்தை. எந்த பெண்ணும் காதில் கேட்க முடியாத வார்த்தையை சொன்னதால் அவர் எதிர்வினையை ஆற்றியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த பெண் மீதும் இத்தகைய வன்முறை, கொடுமை வார்த்தைகளால் வீசப்பட்டால், நிச்சமாக புலி போல் எந்த தமிழ் பெண்ணும் வெகுண்டு எழுவார்கள். இதில் யாரும் விதி விலக்கல்ல.
 

இன்னும் எப்.ஐ.ஆர். போடவில்லை. தனது மானத்திற்கும், சுயகவுரத்திற்கும் இழுக்கு ஏற்பட்டால் எந்த பெண்ணும் எதிர்வினை ஆற்றலாம் என்பதே சட்டம். கோவிலில் பிரசாரம் செய்ய அனுமதித்தது, அதை தடுக்க வந்த எங்கள் பெண் நிர்வாகியை தாக்க வந்தது, எந்த பெண்ணும் கேட்க முடியாத வார்த்தைகளால் பேசியது தவறு.
 

tamilisai soundararajan


 

இவ்வளவு தப்பையும் செய்துவிட்டு தமிழகத்தில் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடியும் என்றால் போலீசார் எங்கே உள்ளனர். தமிழகத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இப்பிரச்சனையில் தமிழகத்தில் பெண்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவேன்.
 

மேலும் மீனாட்சி கல்லூரியில் அஸ்வினி என்ற பெண்ணை கயவனால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்சினையில் போலீசாரிடம் ஏற்கனவே அவர்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பெண்ணிற்கு போலீசார் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. 
 

தமிழத்தில் ஒரு தலைக்காதலுக்கு பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். காதலிக்கவில்லை என்றால் பெண்கள் விருப்பம் போல் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் நெல்லையம்மாள், அஸ்வினி ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.