Skip to main content

ஏற்றுக்கொள்கிறேன்! தமிழிசைதான் அறிவாளி: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
Tamilisai Soundararajan - anbumani 400


தமிழிசைதான் அறிவாளி என்பதை ஏற்றுக்கொள்கிறேன் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாசுக்கும் டிவிட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்களும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்,

 

 

டாக்டர் ராமதாசை நான் தவறாக குறிப்பிடவே இல்லை. மரங்கள் வெட்டப்படுவது பற்றி டாக்டர் ராமதாஸ் பேசுவதா? என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால் நான் ஜாதியை பற்றி பேசியதாகவும், வன்னியர்களை பற்றி பேசியதாகவும் பொய் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களை திசை திருப்ப நினைக்கின்றனர். சொல்லாத ஒன்றை கூறி, தமிழிசை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார் என போராடுவது சரியல்ல. கருத்துக்கு எதிர் கருத்து தான் சரியாக இருக்கும் என கூறினார்.

எனினும் தமிழிசையின் கருத்துகளை ஏற்காத பா.ம.க, தமிழிசை செளவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை (28.06.2018) பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்,

 

 

தமிழிசைதான் அறிவாளி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மருத்துவ இடத்தை பொதுப்போட்டியில் மெரிட் பிரிவில் பெற்றேன். சிபாரிசு அடிப்படையில் சீட் வாங்கிய தமிழிசைதான் சிறந்த அறிவாளி என கூறியுள்ளார். மேலும், தமிழிசையுடன் விவாதத்திற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.