Skip to main content

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Tamil Nadu Govt orders transfer of IAS officers

 

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீலா ராஜேஷ் - எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

மேலும்  ரமேஷ் சந்த் மீனா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராகவும், வீர் பிரதாப் சிங் - வணிகவரித்துறை துணை ஆணையராகவும், விஜயராணி - கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகவும், ஆசியா மரியம் - சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராகும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

சந்திரசேகர் சாகாமுரி - பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராகவும், எஸ்.விஜயகுமார் - தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தின் முதன்மை செயலாளராகவும், ஸ்வர்ணா -  தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் தலைவராகவும், கண்ணன் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

ரஞ்சீத் சிங் - நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும், அலர்மேல்மங்கை - சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரியாகவும், சுரேஷ் குமார் -  தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்