Skip to main content

சீவலப்பேரி கொந்தளிப்பு; சமாதானப்படுத்திய சபாநாயகர் அப்பாவு 

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

பாளையங்கோட்டையை ஒட்டியுள்ள சீவலப்பேரியில் கடந்த 10ம் தேதியன்று இரவு கூலித் தொழிலாளியான மாயாண்டி (39) என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை காரணமாக சீவலப்பேரியில் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பியது. இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் ஏப். 18 அன்று சீவலப்பேரியின் சுடலைமாடசாமி கோவில் பூசாரியான சிதம்பரத்தின் கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக மாயாண்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவர, வல்லநாடு, வசவப்பபுரம், சீவலப்பேரியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மூன்று சிறுவர்களும் அடக்கம். மேலும், சிதம்பரம் கொலையில் குற்றஞ்சாட்டியவர்களின் தரப்பின் சாட்சியான பி.டபிள்யு-1வது நபரைக் குறிவைத்ததில் அவர் சிக்காமல் போகவே அவரது உறவினரான மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதனிடையே பாதிக்கப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்காமல் சாலை மறியல் என 4 நாட்கள் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் பேசிய வள்ளிநாயகம், துரை உள்ளிட்ட பிரதிநிதிகளின் உடனான பேச்சுவார்த்தையில் கலெக்டரான விஷ்ணு முதற்கட்டமாக தற்காலிகப் பணி தருவதாக தெரிவிக்க அதனை அவர்கள் ஏற்கவில்லை. நிரந்தரப்பணி, நிவாரணம் வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்த ஏரியாவில் பதற்றம் நீடித்தது.

 

 Sivalapperi issue Assembly Speaker Appavu made conversation

 

இதனிடையே கொலையான மாயாண்டியின் உறவினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களிடம் சபாநாயகர் அப்பாவு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிதம்பரம் மற்றும் மாயாண்டி குடும்பத்தினருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் அளிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் உடலைப் பெற சம்மதித்ததால் 5 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சிதம்பரம் மற்றும் மாயாண்டி இரு குடும்பத்தார்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து குடும்பத்தினரின் கல்வித்தகுதிக்கேற்ப கிராம உதவியாளர், ரேசன் கடை பணியாளர் அல்லது சத்துணவு பணியாளர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சபாநாயகர் அப்பாவு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்