Skip to main content

என்.எல்.சி தலைமை அலுவலகம் முற்றுகை; நெய்வேலியில் பரபரப்பு

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

Siege of NLC headquarters; Confusion in Neyveli

 

என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி தலைமை அலுவலகத்தினை முற்றுகை செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவேட்டி, வளையமாதேவி, மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 வருடத்திற்கு முன்பு, தங்களது வீடு, நிலங்களை கொடுத்தனர். வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குறுகிய காலப் பணியாக, தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. அப்படி பணியில் இணைந்தவர்கள் கடந்த 10 வருடமாக, இரண்டாவது சுரங்க தோட்டக்கலைத் துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

அவ்வாறு பணி புரியும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையிலேயே பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், மூன்று வருடத்திற்கு, ஒருமுறை ஒப்பந்தம் மாறுகின்ற போது, அடுத்த வரும் ஒப்பந்த வேலைக்காக காத்திருப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி வருவதால், BMC என்று சொல்லக்கூடிய நிரந்தர வேலையை, என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி என்.எல்.சி  நிறுவன தலைமை அலுவலகத்தை, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.

 

மேலும் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியமாக, 418 ரூபாய் பெற்று வரும் நிலையில், தற்போதைய விலைவாசி உயர்வினால், ஊதியம் பற்றாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், நிரந்தர வேலை கொடுத்தால் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் கிடைக்கும், ஆதலால் சம்பளத்தை உயர்த்தி வழங்க  வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முற்றுகையின் போது முற்றுகையில் ஈடுபட்ட மக்களை, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.

 

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த என்எல்சியின் உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு வார கால அவகாசம் தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.