Skip to main content

“இரண்டாவது தலைநகரம்; திருச்சிக்கு அடிப்படை‌ வசதிகள் தர அரசு தயாராகிவிட்டது..” - அமைச்சர் கே.என். நேரு 

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

“The second capital; The government is ready to provide basic facilities to Trichy. ”- Minister KN Nehru

 

இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைமுறைக்குவந்துள்ளது. தமிழ்நாட்டில், இன்று காலை சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. அந்தவகையில், திருச்சியில் நடைபெற்றுவரும் சிறார்களுக்கான கரோனா தடுப்பூசி திட்டத்தை திருச்சி புத்தூர் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “15 வயது முதல் 18 வயது வரையிலான 1,26,400 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு தேவையில்லை. பள்ளிகளிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்‌ என முதல்வர் தெரிவித்துள்ளார். தியேட்டர்கள், மால்களில் 50% பொதுமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புத்தாண்டு என்ற காரணத்தால் கோவில் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வீட்டிலிருந்து வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

 

ஒமிக்ரான் வைரஸிற்க்கு ஆக்ஸிஜன் தேவைப்படாது. இருப்பினும் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை அளிக்க அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும். ரூ. 90 கோடி மதிப்பில் காவிரியில் புதிய பாலம் கட்ட முதல்வர்‌ உத்தரவிட்டுள்ளார்.

 

இரண்டாவது தலைநகரம் என்று சொல்லாமலேயே திருச்சிக்கு அடிப்படை‌ வசதிகள் தர அரசு தயாராகிவிட்டது. மணப்பாறையில்  சிப்காட் வளாகத்தில் புதிய தொழிற்சாலை அமைத்து தர தொழில்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்து தருகிறேன் என்றார். மேலும் இராணுவத் தளவாடங்கள் எல்லாம் திருச்சிக்கு கொண்டு வருகிறேன்‌ என்று கூறியுள்ளார். அரைவட்ட சாலை முழுமையடைந்ததும் திருச்சிக்கு புது வியாபாரம் கிடைக்கும்.

 

இரண்டாவது தலைநகரம்‌ என்று சொல்லி அரசு அலுவலகங்கள் வருவதற்கு தாமதம் ஆகலாமே தவிர அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஒரு வருடத்தில் முடிந்து பேருந்து நிலையம் செயல்பட ஆரம்பிக்கும். இதன் மூலம் 20,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகளுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும். அடுத்த வருடம் மணப்பாறைக்கும், துறையூருக்கும் கல்லூரிகள் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.