Skip to main content

10 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி ஆசிரியர் கடத்தல்; இருவர் சிக்கினர்!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தொழில் அதிபர். இவருடைய மகன் மணிகண்டன் (30). ஆசிரியர். இவருடைய மனைவி நியா. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். குறிப்பாக, மணிகண்டன் தனது பெற்றோரின் கடும்  எதிர்ப்பையும் மீறி நியாவை கரம் பிடித்தார்.

 


சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி  அருகே உள்ள அய்யாகவுண்டர் காடு பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை  உள்ளது. 

 

arrest


வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  மணிகண்டன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை (டிச. 7) மாலை 3 மணியளவில், வழப்பாடி டவுனுக்கு வந்துள்ள நண்பர்களை பார்த்துவிட்டு வந்து விடுவதாக பள்ளியில் சொல்லிவிட்டு, மணிகண்டன்  பள்ளியைவிட்டுச் சென்றார். 

 


அன்று இரவு 7 மணியளவில், தந்தை ராஜேந்திரனை  செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மணிகண்டன், பத்து லட்சம் ரூபாய் கேட்டு மர்ம நபர்கள் தன்னை  கடத்தி வந்துள்ள அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.

 


இதுகுறித்து ராஜேந்திரன் மற்றும் மணிகண்டனின் மனைவி நியா ஆகியோர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் கடத்தல் கும்பல் பேராவூரணி பகுதியில் காரில் சுற்றி வருவது தெரிய வந்தது. 

 


சேலம் மாவட்ட போலீசார் தஞ்சாவூர் மாவட்ட போலீசாரையும் உஷார்படுத்தினர். கடத்தல் கும்பலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தியது ஒருபுறம் இருக்க, அந்த கும்பல் கேட்டுக்கொண்டபடி பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு செல்லும்படி ராஜேந்திரனையும் போலீசார் அனுப்பி வைத்தனர். 

 


கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு பணத்துடன் சென்ற  ராஜேந்திரன், பணப்பெட்டியை கொடுக்க முயன்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அந்த கும்பலை  மடக்கிப் பிடித்தனர். ஆசிரியர் மணிகண்டனையும் பத்திரமாக மீட்டனர்.  

 


கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். மற்ற இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட நபர்கள் பேராவூரணியைச் சேர்ந்த மகேஷ், தேனியைச் சேர்ந்த வீரா எனத் தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களில் ஒருவர், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த மணியரசன் என்பதும் தெரிய வந்தது.

 


பிடிபட்ட நபர்களையும், ஆசிரியர் மணிகண்டனையும் போலீசார் வாழப்பாடிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஆசிரியர் மணிகண்டனும், தப்பியோடிய மணியரசனும் நண்பர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

இதனால், ஆசிரியர் மணிகண்டனே தந்தையிடம் பணம் பறிக்கும் நோக்கில் கடத்தல் நாடகமாடினாரா? அல்லது நிஜமாகவே கடத்தல் கும்பல் அவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிக்க முயன்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.