Skip to main content

ஆணவக்கொலை புகார்; சிறுமியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Salem girl child passed away police investigating with her father

 

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் சிறுமி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய புகார் குறித்து, சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயதுடைய மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (22) என்ற இளைஞரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். செப். 19ம் தேதி சம்பத், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

சிறுமியின் பெற்றோர் தன் மகளை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டதாக சம்பத் மீது காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுமியோ, தான் சம்பத்தை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

 

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவிக்கு துணையாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட அறிவழகன் செப். 26ம் தேதி காலை வீட்டுக்கு வந்தார். அங்கு மகள் சடலமாகக் கிடந்தாள். 

 

இதற்கிடையே, சிறுமியின் காதலனான சம்பத்தின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை அவருடைய பெற்றோரே சாதி ஆணவக்கொலை செய்து விட்டதாகவும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவளுடைய தாயார் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் புகார் அளித்தனர். இதற்கிடையே, சிறுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடல், தகனம் செய்யப்பட்டது. 

 

மகளை ஆணவக்கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் சிறுமியின் தந்தை, உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயார் சிகிச்சையில் இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், உடற்கூராய்வின் அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் கிடைத்துவிடும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.