Skip to main content

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு மீண்டும் நீர்திறப்பு!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்பட்ட 5,000 கனஅடி உபரிநீர் நிறுத்தப்பட்டு, பாசனத்துக்கு 16,000 கனஅடி நீர் திறப்பு. 

salem district mettur dam water level delta side


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 6,205 கனஅடியாக அதிகரிப்பு. அதேபோல் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்