Skip to main content

போலி விசா தயாரித்து ரூ.40 லட்சம் மோசடி... மூவர் தலைமறைவு!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

Rs 40 lakh fraud, three got missing ....!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், நிரைமரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (48). இவர் ஏஜெண்டுகள் மூலம் அரபு நாடுகளுக்கு, வேலைக்கு ஆட்கள் அனுப்பும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கம்பெனிக்கு, நூறு ஆட்கள் தேவை என்று, திலன் சந்திரன் என்ற ஏஜென்ட் மூலம் அங்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதற்கு இராமநாதன் ஏற்பாடு செய்துள்ளார். 
 

இதற்காக கேரள மாநிலம், இடைக்காட்டு வயல்செட்டி கோட்டையைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் மூலம், அப்பகுதியைச் சேர்ந்த பலரை வேலைக்கு எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், திலன் சந்திரன் என்பவர் மூலம் துபாயில் உள்ள சூப்பர் மார்க்கெட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்வதற்காக வங்கிக் கணக்கு மூலமும், நேரடியாகவும் சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை திலன் சந்திரனுக்குக் கொடுத்துள்ளனர். 

 

பணத்தைப் பெற்றுக்கொண்ட திலன் சந்திரன் 81 நபர்களுக்கு போலி விசா தயாரித்து ராமநாதனுக்கு அனுப்பியுள்ளார். இது போலி விசா என்பதை தெரிந்த கொண்ட ராமநாதன், திலன் சந்திரனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, இப்படி போலி விசா கொடுத்து ஏமாற்றலாமா என்று கேட்டபோது திலன் சந்திரன், ராமநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ராமநாதன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜியாவுல் ஹக் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் மோசடிகளில் ஈடுபட்ட திலன் சந்திரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மற்றும் மலைக்கோட்டாலம் சேர்ந்த மாயக் கண்ணன் ஆகிய மூவர் மீதும் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Kallakurichi school incident case High Court action order

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில். “இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த 4 மாதக்காலத்திற்குள் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி? தட்டிக்கேட்டவரை வீடு புகுந்து தாக்கிய கொடூரம்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Government school cleaning with students

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது பைத்தன்துறை கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியைச் சுத்தம் செய்து வருவதாகவும் மாணவர்களைக் கொண்டு குப்பை அல்ல செய்வதாகவும் அதே கிராமத்தைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் பள்ளியில் உள்ள ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுவர்களைக் கொண்டு சுத்தம் செய்தால் இன்னும் நன்றாக சுத்தம் செய்யலாமே எனச்சொல்லி உள்ளார். இது பற்றி அதிகாரிகளுடன் புகார் தெரிவிப்பேன் இனி எப்படி நடக்கக் கூடாது எனக் கூறிச்சென்றுள்ளார்

இந்த நிலையில், மாணவர்களை எப்படி சுத்தம் செய்ய வைப்பீர்கள் என நீ எப்படி கேட்கலாம் எனப் பைத்தம்துறை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மற்றும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவர் பைத்தன்துறை பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை மற்றும் வீடு வைத்துள்ள தீனதயாளனின் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி  உள்ளனர்.

அப்போது கடையிலிருந்து வெளியே வந்த தீனதயாளன், அவர்களிடம், “நான் எனது கருத்தை மட்டுமே கூறினேன்..” எனப் பேசிக் கொண்டிருந்தபோது, ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி என்பவர் தீனதயாளனைக் காலணியால் அடித்து  அவரைக் கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். மேலும் அவரது சகோதரர் ஊர் காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் தீனதயாளனை தாக்கியுள்ளார்.

பள்ளி மாணவிகளுக்காக கேள்வி எழுப்பியவரை தாக்கியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. தன்னைத் தாக்கிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்துசாமி மீதும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்ன சேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மாணவர்களைச் சுத்தம் செய்ய வைக்க வேண்டாம் எனக் கருத்து கூறிய நபரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.