Skip to main content

சேலம், விழுப்புரத்தில் கைவரிசை... கொள்ளை கும்பலிடம் இருந்து 83 பவுன் நகைகள், ரொக்கம் பறிமுதல்! 4 பேர் அதிரடி கைது! 

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

robbery gang arrested in salem

 

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல வீடுகளில் நகைகள், பணத்தைத் திருடிய நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 பவுன் நகைகள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

சேலம் அங்கம்மாள் காலனி பழனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் அரவிந்த் (25). சேலத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 18) இரவு சேலம் லீ பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. மர்ம நபர்கள் அவரிடம் கத்தி முனையில் 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர். 

 

இதுகுறித்து அரவிந்த், பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் சேலம் சினிமா நகரைச் சேர்ந்த பாண்டியன் (35) மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் பாண்டியனை புதன்கிழமை (ஜன. 19) காவல்துறையினர் கைது செய்தனர். 

 

அவருடைய கூட்டாளிகளான ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமார் (30), தீவட்டிப்பட்டி கோவிந்தன் மகன் அண்ணாமலை (37), திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சங்கர் (40) ஆகியோரையும் ஜன. 19ல் கைது செய்தனர். இவர்கள் நால்வரும் சேலம் மாநகரம், சேலம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 11 வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்தது. 

 

கடந்த செப்டம்பர் மாதம் பள்ளப்பட்டியில் ஒரு நகைக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 11 பவுன் நகைகளையும் இந்த கும்பல்தான் திருடியிருப்பது தற்போது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணத்தை பாண்டியன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் பாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் 83 பவுன் நகைகள், 2.50 கிலோ வெள்ளி பொருள்கள், 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர். 

 

பிடிபட்டுள்ள பாண்டியன் மீது மட்டும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 20 குற்ற வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் விசாரணையில் இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். 

 

நீதிமன்ற உத்தரவின்பேரில் நால்வரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்