Skip to main content

பீட்ரூட்டில் இருந்த எலியின் தலை; சைவ உணவு வாங்கியவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

A rat's head in a beetroot; A shocking incident happened to a vegetarian

 

ஆரணியில் துக்க நிகழ்வுக்காக சைவ ஓட்டலில் வாங்கிய சாப்பாட்டில் எலியின் தலை இருந்ததால் வாங்கியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சைவ ஓட்டலில் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நபர், தனது உறவினர் இறப்பில் பங்கேற்ற உறவினர்களுக்கு 35 சைவ சாப்பாடுகள் ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் படி அவரின் வீட்டிற்குச் சாப்பாடு அனுப்பப்பட்டது. 

 

வீட்டில் உறவினர்கள் சாப்பிடும் பொழுது பீட்ரூட்டில் எலியின் தலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எலியின் தலையைப் பார்ப்பதற்கு முன்பு சாப்பிட்டவர்கள் சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர். உடனே, வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டலுக்குச் சென்று நீங்கள் கொடுத்த உணவில் எலியின் தலை இருந்ததாக முறையிட்ட பொழுது அதனை ஓட்டல் ஊழியர்கள் ஏற்கவில்லை. 6 மணிநேரத்திற்கு முன் கொடுத்தனுப்பிய உணவிற்கு இப்பொழுது வந்து உணவில் எலித்தலை இருக்கிறது என்று சொல்வது முறையல்ல என்று கூறவும் இரு தரப்பிற்கும் இடையே  வாக்குவாதம் எழுந்தது. 

 

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து எலியின் தலை இருந்த சாப்பாட்டை உணவு பரிசோதனை அதிகாரிகளுக்குப் பரிசோதனை செய்ய  அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து உணவு வாங்கியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.